Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த விதையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் முடி உதிரவே உதிராது..!

Advertiesment
Hair Problem
, புதன், 31 மே 2023 (18:50 IST)
பெரும்பாலான பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி முடி உதிர்வு பிரச்சனை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில் முடி உதிர்களை தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்ப்போம். 
 
முடி உதிர்வதை தடுக்க பல்வேறு மருத்துவங்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தது. ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தான் முடி உதிர்வு பிரச்சினை வரும் என்றும் எனவே நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்து இருந்தால் இந்த பிரச்சனையை எளிதாக போக்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் சாரை பருப்பு என்ற விதை முடி உதிர்வை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விதையில் இரும்பு கால்சியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் முடி ஆரோக்கியத்திற்கு அவசியமான அதிக புரதம் கிடைக்கிறது. 
முடி உதிர்வை தடுக்கவும் முடி உடைவதை தடுக்கவும் சாரை பருப்பும் பெரும் பயனளிப்பதாக கூறப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் இரவில் ஊற வைத்த சாரை பருப்பை நான்கு வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் முடி உதிர்தல் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யவே கூடாது?