Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

Mahendran
புதன், 21 மே 2025 (18:08 IST)
மாதம் மாதம் பார்லருக்கு போய் முகத்தை ஜொலிக்க வைக்க பல பெண்கள் ரூபாய் நூற்றுக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் அதற்காக வெளி செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய சிறந்த வழிமுறைகள் இருக்கிறது. அதுதான் கோதுமை மாவு.
 
சப்பாத்தி, பூரி மட்டும் இல்லாமல், கோதுமை மாவு மூலம் உங்கள் முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் முடியும். அதற்கான செய்முறை இதோ:
 
ஒரு சின்ன பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பசும்பால், அரை ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலக்கவும்.
 
முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு, கண் பகுதிகளை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலே அப்ளை செய்யவும். மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும்.
 
பத்து நிமிடங்கள் காயவிடுங்கள். ஆனால் மிகவும் காய்ந்துவிட கூடாது. அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரால் மென்மையாக கழுவி, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவுங்கள்.
 
இதனால் முகம் இயற்கையான பிரகாசத்துடன் பளபளக்கும்!
 
இது உங்கள் இயற்கையான பார்லர் அனுபவம் – அதுவும் உங்கள் வீட்டிலேயே!
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

அடுத்த கட்டுரையில்
Show comments