Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் கடற்கரைக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (21:47 IST)
தினமும் கடலுக்கு 15 நிமிடம் சென்று வந்தால் பலவிதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
நமது பூமியில் 70 சதவீதம் கடல் நீரே உள்ளது. பல வகையான நீர் ஆதாரங்களுக்கும் முக்கிய சான்று இந்த கடல் நீர்தான் விளங்குகிறது. இதில் சோடியம் குளோரைடு, கால்சைட், ஐயோடின், தாதுக்கள் போன்ற 84 வகை மூல பொருட்கள் இருக்கின்றன. 
 
இவை அனைத்தும் உடலின் நலத்தை சீராக வைக்கும். மேலும் உடலில் எந்தவித நோய் தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும். கடல் நீர் மிக அருமையான மருத்துவ குணம் கொண்டது. நீங்கள் கடல் நீரில் தினமும் குளித்தால் 20% சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
 
இதனால் எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உடலில் எந்தவித நோயையும் வராமல் தடுக்கலாம். அத்துடன் ரத்த சோகையை குணப்படுத்தி, சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
 
தினமும் கடற்கரைக்கு சென்று வந்தால் உங்கள் மன அழுத்தம் குறையும். தினமும் கடற்கரைக்கு சென்று, சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்த்துமா, சுவாச பிரச்சினை உள்ளிட்டவைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments