தயிரா? மோரா? கோடைக்கு சிறந்தது எது?

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (15:09 IST)
தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா? என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும். 
 
என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவும். 
 
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிட கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு, சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகுமாம்.  
 
ஆனால், தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 
 
கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்ள கூடாது. உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொள்வதால் எந்த பயனும் இல்லை. தயிர் சூட்டைத்தான் ஏற்படுத்தும். 
 
எனவே, கோடைக்காலத்தில் தயிரை விடவும், மோரை பயன்படுத்துவதே சிறந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

அடுத்த கட்டுரையில்
Show comments