Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்ச்சத்து கொண்ட கோடைக்கால சிறப்பு உணவுகள்!

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (15:52 IST)
கோடைக்காலத்தில் எந்த அளவுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலிற்கு நல்லது. 

 
கோடைக்காலத்தில் உடலிற்கு நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறி மற்றும் பழங்களில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வெள்ளரி, தக்காளி தர்ப்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வெங்காயம் ஆகியவை கோடைக்காலத்திற்கு ஏற்ற சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள்.
 
தக்காளி - தக்காளி அதிக தண்ணீர் சத்து உடையது. தக்காளியில் உள்ள "லைக்கோபீன்" என்ற வேதிப்பொருள் நமது சருத்தை வெயிலில் இருந்து பாதிக்கப்படாமல் காக்கிறது. 
 
வெங்காயம்: வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.
 
வெள்ளரி - உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரியின் தோலில் அதிகமாக "ஸ்டீரால்" உள்ளது. எனவே வெள்ளரியைக் கழுவிவிட்டு தோலைச் சீவாமலே சாப்பிடலாம்.
 
தர்ப்பூசணி - தண்ணீர்ச் சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணியில் நார்ச்சத்து அதிகமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வெயில் நேரத்தில் மயக்கம் வருவது ஏன்?

அக்னி நட்சத்திர வெயில் நேரத்தில் என்னவெல்லாம் செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments