Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (12:33 IST)
யோகா, தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன. 

 
மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், தனிமை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது.
 
தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.
 
உடல் வலி, தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்குகிறது. தினமும் தியானம் செய்வதால் மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் வராது.
 
ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது. தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தலே போதும். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
தினமும் தியானம் செய்வதால் மூளை சுறுசுறுப்பாகும். மூளையில் ஆரோக்கியமும் மேம்படும். தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments