Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீரக் கல் பிரச்சினையை தீர்க்கும் சில பயனுள்ள தகவல்கள்

சிறுநீரக் கல் பிரச்சினையை தீர்க்கும் சில பயனுள்ள தகவல்கள்

சிறுநீரக் கல் பிரச்சினையை தீர்க்கும் சில பயனுள்ள தகவல்கள்
சிறுநீரக்கல் வலி வந்த ஒருவர் இணையதலத்தில் பகிர்ந்த சில பயனுள்ள தகவல்கள்:
 
கால் கிலோ பீன்ஸ் (ஃபிரஞ்சு பீன்ஸ்) வாங்கி, விதை மற்றும் நார் நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும் இந்த முறையை சரியாகும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பின்பற்றி வாருங்கள்.


 
 
துளசி இலை (basil): இந்த இலையின் சாருடன், தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம். (கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்).
 
ஆப்பிள் (Apple): அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
 
திராட்சை ( Grapes): இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
 
மாதுளம் பழம் (pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
 
அத்திப்பழம் (Figs): இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
 
தண்ணீர்பழம் (water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
 
இளநீர்: இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
 
வாழைத்தண்டு ஜூஸ்: வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.
 
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
 
குறிப்பு 1: கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது. 
 
குறிப்பு 2: இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். 
 
இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்