Publish Date: Wed, 03 Feb 2016 (12:18 IST)
Updated Date: Wed, 03 Feb 2016 (12:23 IST)
பொதுவாக புதுமண தம்பதியினருக்குள் திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்தே மனக்கசப்பை வெளிப்படுத்துவார்கள். அதுவரை கோபம் இருந்தாலும் அதனை வெளிகாட்டிக்கொள்ளாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் திருமணம் நடைபெறும்போதே ஒரு மணமகன் மணப்பெண்ணிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவில் மணமகன் மணமகளுக்கு கேக்கு ஊட்டுகிறார். மணமகளும் மணமகனுக்கு கேட்டு ஊட்ட முயற்சிக்கிறார். சிறிது நேரம் கேக்கை ஊட்டுவது போல மணமகனுடன் மணமகள் விளையாடுகிறார்.
இதில் கடும் கோபம் அடைந்த மணமகன் மணப்பெண் வைத்து இருந்த கேக்கை தட்டி விடுகிறார். இதனால் அங்கு பரபரபரப்பு ஏற்பட்டது.இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...