Group Call-ல் 8 பேர்: வாட்ஸ் ஆப் மாஸ் அப்டேட் ப்ளான்!!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:13 IST)
வாட்ஸ் ஆப் செயலி தனது க்ரூப் கால் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரிக்கவுள்ளது என தகவல். 
 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா காரணமாக வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்டஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது.  
 
இதனைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது வரை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் குரூப் வீடியோ / குரல் அழைப்பில் இனி, நான்கு நபர்களில் இருந்து, எட்டு நபர்களுடன் உரையாடலாம். பீட்டா பதிப்பை வைத்திருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களூம் இந்த அம்சத்தை பெறுவார்கள். 
 
இந்த அப்டேட், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50.25 பீட்டாவில் பயனர்களுக்கு வெளிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments