Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேபிடை விட பிசிஆர்தான் அவசியம்! – மருத்துவ கவுன்சில் விளக்கம்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (11:52 IST)
ரேபிட் கொரோனா சோதனைகள் தவறாக முடிவுகள் காட்டுவதாக செய்திகள் வெளியான நிலையில் டேபிட் சோதனையை நிறுத்தி வைத்த இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது சில விளக்கங்களை அளித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்ய சீனாவிலிருந்து லட்சக்கணக்கில் இந்தியா ரேபிட் கிட் கருவிகளை வாங்கியது. ஆனால் அவற்றில் கொரோனா அறிகுறிகள் குறித்த சரியான முடிவுகள் தெரிய வரவில்லை என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு கொரோனா சோதனைக்கு ரேபிட் கிட் பயன்பாடை நிறுத்தி வைக்க இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் ரேபிட் கிட் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில் “கொரோனா இருக்கிறதா என கண்டறிய வழக்கம்போல பிசிஆர் சோதனையையே மேற்கொள்ளலாம். கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம். ரேபிட் கருவி உடலில் ஆண்டிபாடி எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறிய பயன்படுகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments