Publish Date: Tue, 16 Jun 2020 (15:40 IST)
Updated Date: Tue, 16 Jun 2020 (15:48 IST)
வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் தங்களுக்கு தெரிந்தவர்களுக்குப் பணம் அனுப்பக் கூடிய வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களின் விலை உள்ளிட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பேமெண்ட் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம் தனிநபர்கள் இலவசமாக, வியாபாரிகள் கட்டணம் செலுத்தியும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.