Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேய் அம்பானி... உனக்கென்னப்பா குறைச்சல்... புலம்பும் ஜியோ பயனர்கள்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (12:53 IST)
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் ஜியோவும் 40% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 
 
2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.
 
அதன் பின்பு ஜியோவுக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
ஆம், ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14% முதல் 40% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல வோடஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி புதிய ரீசார்ஜ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 
 
இந்நிலையில் ஜியோ நிறுவனமும் வருகிற 6 ஆம் தேதி முதல் 40% கட்டணத்தை உயர்த்த உள்ளது. புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 
 
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் விலை உயர்த்துவதை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், அதிக லாபத்துடன் இயங்கி வரும் ஜியோ ஏன் விலை உயர்த்த வேண்டும் என ஜியோ வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments