Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.500 கோடி டாலர் கடன்: வோடபோன் - ஐடியா கூட்டு திட்டம்!!

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (13:33 IST)
இந்தியாவின் முன்னணி மூன்றாம் நிலை தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா இணைந்து முதல் நிலை தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுக்க திட்டமிட்டு வருகின்றன. 
 
இருப்பினும் இந்த இணைப்பிற்கு முன்னர், இரு நிறுவனங்களின் கடன் சுமைகளை குறைக்க திட்டமிட்டுள்ளன. இதனால், இரு நிறுவனங்களும் தங்கள் வசம் உள்ள செல்போன் டவரை விற்க முடிவு செய்துள்ளன. மேலும், புதிய முதலீடுகள் மூலமும் ரூ.500 கோடி டாலர் கடன் சுமையை குறைக்கும் திட்டமிட்டு வருகின்றன. 
 
வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இணைய முடிவு செய்துள்ளன. எனவே, இதற்கு முன்பாக கடன் பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளனர். ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ள நிலையில், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் செயல்பாட்டு வருமானம் பெருமளவு குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments