Publish Date: Mon, 19 Feb 2024 (11:37 IST)
Updated Date: Mon, 19 Feb 2024 (11:41 IST)
பங்குச்சந்தை இன்று வாரத்தின் முதல் நாளே உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலில் உயர்ந்து கொண்டே வருகிறது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 223 புள்ளிகள் உயர்ந்து 72,623 என்ற புள்ளைகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 222 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 112 மூன்று என்ற புள்ளைகளில் வர்த்தகமாகி வருகிறது
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ், சிப்லா, கோல்ட் பீஸ், ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஐடி பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது