Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றை விட ரூ.8 விலை அதிகரித்த தங்கம்! இன்றைய நிலவரம்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (12:12 IST)
கடந்த சில வாரங்களில் விலை உயர்ந்த தங்கம் நேற்று விலை குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.8 விலை உயர்ந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமான சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற தொடங்கியது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆகி வந்தது.

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று  சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.32,784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,098 ரூபாயாக உள்ளது.

கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கள் சிறிதளவே விலை குறைந்திருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தங்கத்தின் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments