Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன கார் ; அதை விட சின்ன ஆயுள் – நானோ கார்களுக்கு சுபம் !

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:52 IST)
இந்தியாவின் மிக சிறிய மற்றும் மலிவானக் கார் என அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார்களின் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகளவில் மிக விலை குறைவான சிறியக் காரை உருவாக்குவதற்காக முயற்சித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. அதன் விலை அப்போது 1 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களின் விலையில் குடும்பமாக செல்ல உதவும் காராக விளம்பரப்படுத்த நானோக் கார்கள் சந்தையில் நல்ல விற்பனை ஆனாலும் கார்களின் பயன்பாட்டி நிறையக் குறைகள் கூறப்பட்டன. எளிதாக வெப்பமடைதல் மற்றும்ம் இடவசதிக் குறைவு போன்றக் காரணங்களால் சந்தையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

அதனால் டாடா நிறுவனமும் படிப்படியாக நானோக் கார் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு வந்தது. கடந்த ஜூன் மாதத்தில் டாடா நிறுவனம் வெறும் நான்கு நானோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்தது.அதனால் இப்போது இந்த நானோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது. பி.எஸ்-6 தரநிலைகள் அமலுக்கு வந்தபிறகு 2020 ஆம் ஆண்டு எபரல் முதல் நானோ கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியக் கார் சந்தையில் மிகப்பெரியப் பங்கை வகித்து வரும் டாடா மோட்டார்ஸ் நானோவுடன் இன்னும் சில கார்களையும் நிறுத்தி விட்டு புதிய மாடல்களை உருவாக்க இருக்கிறது. உலகின் மிகக் குறைந்த விலை கார் என அறிமுகப்படுத்தப்பட்ட நானோ 12 ஆண்டுகளில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments