Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: சரியும் சாம்சங், ஒப்போ, விவோ உற்பத்தி!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (18:11 IST)
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சாமசங், ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள உற்பத்தியை நிறுத்தியுள்ளது. 
 
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 3,91,947ஆக உயர்ந்த நிலையில் 1,02,843 பேர் குணமடைந்துள்ளனர். பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், சாம்சங், ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்களது ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரை சாம்சங் ஆலைகளில் உற்பத்தி துவங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விவோ நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கோரியுள்ளது. ஆனால், சில நிறுவனங்களின் ஆலைகளில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments