Publish Date: Wed, 06 Dec 2017 (18:33 IST)
Updated Date: Wed, 06 Dec 2017 (18:38 IST)
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் அதிக அளவில் ஏற்படுகிறது.
மொபைலுக்கு சிறந்த ஆன்டி வைரஸ் பயன்படுத்துவது சிறந்தது. இந்நிலையில், அவாஸ்ட் உடன் இணைந்து ரூ.30க்கு ஆன்டி வைரஸ் சேவையை ஏர்செல் வழங்க உள்ளது.
இதற்கான இந்திய சந்தையில் ஏராளமான ஆன்டி வைரஸ் சலுகைகளை வாரி இறைக்கின்றன. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம், அவாஸ்ட் ஆன்டி வைரஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டா செயல்திறன், தகவல் பரிமாற்றம், போதிய பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை பெற முடியும் என கூறப்படுகிறது.
40 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்செல், அவாஸ்ட் உடன் இணைந்து 80 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வசதியை அளிக்க திட்டமிட்டுள்ளது.
ஏர்செல் கிளீனர் மற்றும் மாதச் சந்தா ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா ரூ.205-க்கு வழங்கப்படுகிறது.