Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதத்தில் ஜியோ 5ஜி?

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:16 IST)
தொலைத்தொடர்பு துறை ஜியோ வரவுக்கு முன் ஜியோ வரவுக்கு பின் என இரண்டு பாகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஜியோ வந்த பிறகு டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 
 
ஜியோ சலுகைகளை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுப்பதால், தங்கலது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள மற்ற நிறுவனங்களும் சேவைகளை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. 
 
மேலும், நாட்டில் 4ஜி சேவை பயன்பாடு வேகமாக அதிகரிக்க ஜியோ மிகமுக்கிய காரணமாக இருக்கிரது. தற்போது ஜியோ ஆறு மாதத்தில் 5ஜி சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை ஜியோ வழங்கும். 
 
அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments