Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் மவுசு காலி: ஜெட் வேகத்தில் ஜியோ; முட்டுக்கொடுக்கும் பிஎஸ்என்எல்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (19:08 IST)
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை தெரிவிக்கிகிறது. 
 
அதேபோல் பிஎஸ்என்எல் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவ்விரு நிறுவனங்கள் மட்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆனால், அதேவேளையில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
 
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம் வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் நிறுவனம் 8,068 வாடிக்கையாளர்களையும் மற்றும் ஆர்காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments