Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைத்தாலாவது விற்பனையாகுமா?: மாருதி கார்கள் விலைக்குறைப்பு

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (14:10 IST)
ஆட்டோமொபைல்ஸ் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் தங்களது வாகனங்களை குறைந்த விலையில் விற்க முன்வந்திருக்கிறது மாருது சுஸுகி நிறுவனம்.

கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் ஆட்டோ மொபைல்ஸ் துறை பெரும் சரிவை சந்தித்தது. இதனால் பல நிறுவன ஊழியர்கள் வேலை இழந்தனர். டிவிஎஸ், சுஸுகி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அளவை குறைத்து கொள்ள தொடங்கின. இந்த பாதிப்புக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பே காரணம் என சொல்லப்பட்டது.

சமீபத்தில் கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. தற்போது ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் மீதான் வரிகளில் சிறிது தளர்வு ஏற்பட்ட்டிருக்கிறது. இந்நிலையில் விற்பனையை அதிகரித்தால் மட்டுமே நிறுவனத்தை நிலைநிறுத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாருது சுஸுகி நிறுவனம் தனது கம்பெனி கார்களுக்கு 5000 முதல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. கார் மாடல்களை பொறுத்து தள்ளுபடியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கார் விற்பனை பழைய நிலைக்கு திரும்பும் என மாருதி நிறுவனம் நம்புகிறது. தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்கள் வாகனங்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments