Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 நாட்களில் ரூ.5,000 கோடி: வங்கி அரசியல்!!

4 நாட்களில் ரூ.5,000 கோடி: வங்கி அரசியல்!!
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (10:40 IST)
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கிகள் பண மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற உள்ளதாக அறிவித்ததுள்ளது.


 
 
வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுளை பெற உள்ளதாக நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களில் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பண மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைப்பு நிதியாகப் பெறப்பட்டுள்ளது.
 
மேலும் வைப்புச் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயில் பெரும் பகுதி விவசாயிகள் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த அறிவிப்பு மற்றும் 5000 கோடி ரூபாய் வைப்பு ஆகியவை அதிக அளவிலான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கூட்டுறவு வங்கிகளின் மத்திய வங்கியான NABARD நிதி மோசடிகள் நடந்துள்ளதா எனச சோதனை செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.
 
இம்மாநிலத்தில் உள்ள வங்கிகளில் பெரும்பாலானவை உள்ளூர் அரசியல் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது எனவே இதில் அரசியல் தலையீடு எதேனும் இருக்குமோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை: நடிகர் ஆனந்தராஜ் ஓப்பன் டாக்!