Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் ஜியோ: கலக்கத்தில் செல்போன் நிறுவனங்கள்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (13:29 IST)
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்து டச் ஸ்க்ரீன் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஜியோ ரூ.1500க்கு பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அந்த போனில் டச் ஸ்க்ரீன் இல்லாத்தும் பெரிய ஸ்க்ரீன் இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதையும் சரி செய்ய இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்க உள்ளது ஜியோ. 
 
நவீன வசதிகள் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிளெக்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஜியோ.  
 
முதல்கட்டமாக 10 கோடி போன்களை தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகளவு மொபைல் போன்களை உற்பத்தி செய்வதால், அரசாங்கத்திடம் வரி சலுகையை கோர ஃபிளெக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments