Publish Date: Wed, 16 Aug 2017 (14:17 IST)
Updated Date: Wed, 16 Aug 2017 (14:18 IST)
தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் வைபை இண்டர்நெட் வேகத்தைவிட 300 மடங்கு வேகமான இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் முறையை கண்டறிந்துள்னர். இந்த கதிர்கள் ஆப்டிக்கல் ஃபைபர் போன்றே வேலை செய்கிறது.
இந்த புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனையில் இவை நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாபது மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்யகூடிய வேகத்தை கொண்டது. இந்த இனஃப்ராரெட் சிக்னல்கள் பயனர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வகை வைபை சேவையை வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.