Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிஎஸ்டி என்றால் என்ன? இதனால் என்ன பயன்??

ஜிஎஸ்டி என்றால் என்ன? இதனால் என்ன பயன்??
, புதன், 28 ஜூன் 2017 (11:28 IST)
ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது. பெரும்பாலன இந்திய மாநிலங்கள் ஜிஎஸ்டி-க்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஜிஎஸ்டியை பற்றி விரிவாக காண்போம்.....


 
 
ஜிஎஸ்டி:
 
# சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. இது ஒரு மதிப்பு கூடுதல் வரியாகும். ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

# மத்திய மற்றும் மாநிலங்களின் இரண்டு சமமான கூறுகளை கொண்டதுதான் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி வரி பணம் நுகர்வோருக்கு சொந்தமாகும். 
 
யாரெல்லாம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்:
 
# வடகிழக்கு மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆரம்ப வணிக தொகை ரூ.10 லட்சம் ஆகும்.
 
# இதனை தவிர்த்து ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் கொண்ட வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 
 
எந்த வரிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி பொருந்தும்:
 
மத்திய சுங்கவரி, கூடுதல் சுங்கவரி, சேவை வரி, மத்திய செஸ் மற்றும் சர்சார்ஜஸ், வாட், விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி, விளம்பர வரி, பந்தைய சூதாட்ட வரிகள், மாநில அரசின் செஸ்கள் மற்றும் சர்சார்ஜஸ், அடிப்படை சுங்க வரி போன்றவை ஜிஎஸ்டிக்கு பொருந்தும்.
 
ஜிஎஸ்டி நன்மைகள்: 
 
# உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பொருட்களின் மீதான வரி குறைக்கும்.
 
# விலை உயர்வு வாய்ப்புகளை தடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள வரி லாபம் நுகர்வோரை சென்றடையும் என தெரிகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொய் வழக்கில் தான் சசிகலா சிறையில் இருக்கிறாராம்: இது நீதிமன்ற அவமதிப்பாகாதா?