தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே பெட்ரோல் விலை உயரக் காரணம். ஆனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் குறையக்கூடும். தீபாவளி பண்டிகை நெருங்கும் போது பெட்ரோலிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் நிலையில் இந்தியாவில் அதிகப்படியான விலையில் விற்கபடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த செயல்பாடு, கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களிடம் வியாபாரம் செய்வது போல் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!