Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவுக்கு தலைவலி: ஆஃபரில் செக் வைக்கும் பிஎஸ்என்எல்!

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (11:22 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. ரீசார்ஜ் கட்டணத்தில் சலுகைகள் மட்டுமின்றி டேட்டாவிலும் சலுகைகளை வழங்கிவருகிறது. 
 
இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே திவால் ஆன நிலையில், வோடபோன் மற்றும் அடியா நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. 
 
தற்போது உள்ள சூழ்நிலையில், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனக்கள் தணித்து தாக்குபிடித்து வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் தற்போது ஜியோவுக்கு போட்டியாக சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 
 
அதில், ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புது சலுகை ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்களுக்கு 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments