Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணமதிப்பு நீக்கம்; வங்கித்துறைக்கு கடும் இழப்பு: எஸ்பிஐ புலம்பல்!!

Advertiesment
பண்மதிப்பு நீக்கம்
, திங்கள், 12 ஜூன் 2017 (15:05 IST)
பணமதிப்பு நீக்கத்தால் வங்கித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
 
இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?: விருது விழாவில் விவசாய அரசியல்!