Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைபிரிட் கார்: ஹோண்டாவின் யுக்தி!!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (14:08 IST)
ஹோண்டா ஆட்டோமொபைல் நிறுவனம் ஹைபிரிட் கார்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறையில் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஹோண்டா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 
 
ஆட்டோமொபைல் சந்தையில், பின் தங்கி விடுவோமோ என்ற  அச்சத்தில் ஹோண்டா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
 
ஒரு ஆண்டுக்கு 2 புதிய மாடல் கார் என்ற வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் பின் தங்கி விட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.  
 
இந்த கேள்விக்கு, இந்திய சந்தையில் விலை மிக முக்கிய காரணியாக திகழ்கிறது. அந்த வரிசையில் பேட்டரி கார்கள் மீதான ஜிஎஸ்டி அதிகமாக உள்ளது. எனவே, இது குறித்த வர்த்தக ரீதியாக பல ஆலோசனைகள் நடைபெற்று பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, ஹைபிரிட் கார் தயாரிப்பிலும் ஹோண்டா ஆர்வம் காட்டி வருகிறதாம். ஹைபிரிட் கார் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும். ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருகிறதாம். 
 
அரசு பேட்டரி வாகனங்களுக்கு அதிக சலுகை அளித்தால், பேட்டரி வாகன தயாரிப்பு அதிகரிக்கும் என ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments