Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (15:08 IST)
இன்னும் சிறிது காலத்தில் தனது 3ஜி சேவைகளை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஜியோ 4ஜி அறிமுகத்துக்கு பின் தனது வாடிக்கையாளர்களை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு வந்தது. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்லும் பல சலுகைகளை வழங்கி வந்தது.
 
ஜியோ தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளதை அடுத்து ஏர்டெலின் சந்தை மதிப்பு உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. வாய்ஸ் கால்களுக்கு 2ஜி சேவை பயன்படுவதால் அதன் வைத்துக்கொண்டு 3ஜி சேவையை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
4ஜி சேவையை அதிகப்படுத்து எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி ஆகிய சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கிறது. அதுவும் புதிய மாடல்கள் அனைத்தும் 4ஜி வசதி கொண்ட மொபைல்கள்தான் பெரும்பாலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments