Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்: பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (11:44 IST)
ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் உள்ள ஜியோவை சமாளிக்க ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த முயற்சிகள் எதுவும் பெரிதாய் கைக்கொடுப்பதாய் தெரியவில்லை. 
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கொல்கத்தாவில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட உள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜி சேவையை பலப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். 
 
வாடிக்கையாளர்கள் பலர் பேசிக் போன்களில் ஏர்டெல் 2ஜி சேவையை பயன்படுத்துவதால் 2ஜி சேவை நிறுத்தப்படாது. அதேபோல் 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. 
 
மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் அப்படியே 4ஜி சேவைக்கு மாறிவிடுவார்கள் என ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments