Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

150 நில கையகப்படுத்தும் சிறப்பு பிரிவு-கமல்நாத்

Advertiesment
கமல்நாத்
புது டெல்லி: , வெள்ளி, 31 ஜூலை 2009 (13:47 IST)
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த நிலம் ஆர்ஜிதம் செய்வதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 150 சிறப்பு நில ஆர்ஜித பிரிவுகளை தொடங்க இருப்பதாக மத்தி நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசும் போது, 190 உள்கட்டமைப்பு திட்டங்கள் காலதாமதமாவதாக ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. இதில் 70 விழுக்காடு திட்டங்கள் நிலம் கையகப்படுத்த ஏற்படும் பிரச்சனையே என்று தெரிய வந்துள்ளது.

இந்த பிரச்சனையை தீர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 150 சிறப்பு நில ஆர்ஜித பிரிவுகளை தொடங்க இருக்கின்றது.

இந்த வருடம் 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை போடுவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிற்கு விலைப்புள்ளிகளை ( டெண்டர்) மத்திய அரசு கோர உள்ளது.

இதே போல் அடுத்த வருடம் 7,000 கி.மீட்டர் சாலை போடுவதற்காக ரூ.1 லட்சம் கோடி கோடி மதிப்பிற்கு விலைப்புள்ளிகளை ( டெண்டர்) மத்திய அரசு கோர உள்ளது என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil