1.5 கோடினா சும்மாவா... விற்பனையில் அசால்டு பண்ணிய ரியல்மி!!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:41 IST)
ரியல்மி பிராண்டு இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்தி ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறியது. 
 
இந்நிலயில், ரியல்மி தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை இரு மடங்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி ரியல்மி ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் ரியல்மி ஏழாவது இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments