Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோல் இந்தியா பங்கு விற்பனை: நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை

Advertiesment
கோல் இந்​தி​யா
புது டெல்லி:​ , வியாழன், 3 டிசம்பர் 2009 (11:56 IST)
மத்திய அர​சு நிறு​வ​ன​மான கோல் இந்​தி​யா​வில் அர​சுக்​கு சொந்தமான பங்குகளில் 15 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய நிலக்கரித் துறை அமைச்சகம் பரிந்​துரை செய்​துள்​ளது.
கோல் இந்தியா நிறுவனத்திற்கு பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் சொந்தமாக உள்ளது. இதில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோல் இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளில் 15 விழுக்காடு விற்பனை செய்யப்படும். இதில் 10 விழுக்காடு பங்குகளை பொதுப் பங்கு வெளி​யீடு மூலமும், மீதமுள்ள 5 விழுக்காட்டில் 3 விழுக்காடு ஊழியர்களுக்கும், 2 விழுக்காடு சுரங்கம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு வழங்கலாம் என்று நிலக்கரி துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்​பாக மத்திய நிதி அமைச்​ச​கம், பங்கு விற்​ப​னைத் துறஆகி​ய​வைகளுடன் கோல் இந்தியா ஆலோசனை நடத்தி வரு​வ​தா​கத் தெரி​கி​றது.
ஊ​ழி​யர்​க​ளுக்கும், நில இழப்​பீட்​டா​ளர்​க​ளுக்கு பங்​கு​களஒதுக்​கு​வ​தில் சில நடை​மு​றை​க​ளைப் பின்​பற்ற வேண்​டி​யி​ருக்​கும் எதெரி​கி​றது.



Share this Story:

Follow Webdunia tamil