Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எரிமலை வெடிப்பு எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும்

Advertiesment
எரிமலை
, செவ்வாய், 12 ஜூலை 2011 (17:38 IST)
எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர்பார்த்திராத புதிய மாற்றங்களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மார்ச் 20, 2010-இல் ஐஸ்லாந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறித்து இவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த எரிமலை வெடித்து வானில் மிகப்பெரிய் அளவில் சாம்பல் புகையை கக்கி ஐரோப்பா முழுதும் அது பரவிய விதத்தை பிரான்ஸில் உள்ள ஆய்வு நிலையத்திலிருந்து இந்த ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

இந்த சாம்பல் மூலக்கூறுகள் விண்வெளியில் உள்ள மற்ற ரசாயனக் கூறுகளுடன் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

வெடிப்பிலிருந்து கிளம்பிய ரசாயனக்கூறுகளில் பெரும்பாலும் கந்தக அமிலக் கூறுகள் இருந்துள்ளது. கந்தக அமிலக்கூறுகள் மிகப்பெரிய அளவில் விண்வெளியைச் சூழ்ந்தால் அது மேகக்கூட்டத்தை உருவாக்கும் இந்த மேகக்கூட்டம் வானிலையில் தாக்கம் செலுத்தும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நாம் நினைப்பதைவிட 100மில்லியன் மடங்கு அதிகமாக சாம்பல் புகையை இந்த எரிமலைகள் தோற்றுவிக்கின்றன. இந்த சாம்பல் புகை மண்டலம் விண்வெளியில் குறைந்த உயரத்தில் மேகக்கூட்டங்களை உருவாக்கும் என்று தெரிகிறது.

ஆனால் இதனால் என்னவிதமான வானிலை மாற்றங்கள் விளையும் என்பதை மேலும் ஆய்வுக்குட்படுத்தும்போதுதான் நாம் கண்டறிய இயலும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil