Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

Advertiesment
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள பணிமனை, பண்டக உதவியாளர் அகிய பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 பணிமனை உதவியாளர், 1 பண்டக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பத்துடன், கல்வி, ஜாதி, அனுபவம் போன்ற சான்றிதழ்களின் நகல்களை, வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுமார் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி அலுவலர், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil