Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு குரூப் 1,2 மனிதநேயம் இலவச பயிற்சி

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (21:01 IST)
2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குரூப்-1 முதல் கட்டத் தேர்விற்கும், குரூப்-2 எழுத்துத் தேர்விற்கும் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சைதை சா.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கல்வியகம் விடுத்துள்ள அறிக்கையில், “மேற்குறிப்பிடப்பட்ட தேர்வில் பங்கு பெற விரும்புகின்ற மாணவர்கள், ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து www.saidais.com என்ற இணைய தள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை நிறைவு செய்து பதிவு செய்துகொள்ளலாம். நேரில் வருவதோ, கடிதத்தின் வாயிலாக விருப்பத்தை தெரிவிப்பதோ, தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும். இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

ஏற்கனவே குரூப்-1, குரூப்-2 தேர்வில் நேர்முகத் தேர்வு வரை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும ் ” என மாநில தேர்வு ஒருஙகிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

2007 இல் இருந்து இதுவரையில் நடந்த தமிழக அரசின் மாநில தேர்வாணையம் நடத்திய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் மனிதநேய பயிற்சி மையம் 595 மாணவ, மாணவியர்களை வெற்றி பெற வைத்துள்ளது. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றில் 85 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments