Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி.என்.பி.எஸ்.சி சிறப்பு குரூப்-4 தேர்வுத் தேதியில் மாற்றம்

Advertiesment
டிஎன்பிஎஸ்சி
சென்னை , புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:13 IST)
இம்மாதம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பு குரூப்-4 தேர்வு, வரும் அ‌க்டோப‌ர் 11ஆ‌ம் தே‌தி‌‌க்கு த‌ள்‌ளி வை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சிறப்பு குரூப்-4 தேர்வு வரு‌ம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இத்தேர்வு அக்டோபர் 11ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் செப்டம்பர் 15ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. செயலர் ரமேஷ் சந்த் மீனா தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil