Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடுதல் கல்வித்தகுதி: சென்னையில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

Advertiesment
கல்வித்தகுதி
சென்னை , வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:27 IST)
சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, கூடுதல் கல்வித் தகுதியை எளிதாக பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஆ.சு.ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஆண்கள் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் செப்டம்பர் 17, 18, 22, 23, 24, 25, 29, 30 ஆகிய எட்டு நாட்கள் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பி.எட்., எம்.எட்., உள்ளிட்ட கூடுதல் கல்வித் தகுதியை பெற்றவர்கள் பங்கேற்று எளிதாக பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil