Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Advertiesment
TNPSC
சென்னை , வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (16:50 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் வரும் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்டப் பதிவாளர் (பதிவுத்துறை) உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 88 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை 45,000க்கும் அதிகமானோர் எழுதினர். தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தகுதி பெற்ற 888 பேர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 3, 4ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Share this Story:

Follow Webdunia tamil