பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் எழுதிய சிறப்புத் துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியானது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவு பின்வரும் இணையதளங்களில் இன்று காலை வெளியாகியுள்ளது.
pallikalvi.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
dge3.tn.nic.in
தனித் தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை வரும் 30ஆம் தேதி பிற்பகல், தேர்வு எழுதிய மையங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தட்கல் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவு அஞ்சலில் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் ஜெராக்ஸ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆகும் என்று தெரிவித்துள்ளார்.