Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

Advertiesment
ஐஐடி
புதுடெல்லி , செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (16:21 IST)
புதிதாக அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி நாட்டில் உள்ள 13 ஐஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,500 பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐஐடி, ஐஐஎம்) ஆசிரியர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் பதவி உயர்வு, திறமை அடிப்படையிலான ஊக்கத் தொகை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவை வழக்கத்திற்கு மாறாகவும், ஐஐடி ஆசிரியர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்று ஐ.ஐ.டி. ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.தேன்மொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் நாளை (24ஆம் தேதி) ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil