Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா....?

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:01 IST)
திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இல்யல்பாகவே அமந்துவிட்டது. 
நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகாசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன்  என்றானது.
 
இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே  மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார்.
 
மகாவிஷ்ணு நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.
 
சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யாபாமா தனது தாய் என்று தெரிந்தது.
 
நரகாசுரன் இறக்கும் தருவாயில் தன் தாயிடம், நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். அதற்காக இந்நாளை அனைவரும் இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். ஆகவே நரகாசுரன் மறைந்த இந்த நாள் தீபாவளி பண்டிகையாக  கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments