Publish Date: Sat, 07 Nov 2020 (23:39 IST)
Updated Date: Sat, 07 Nov 2020 (23:42 IST)
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும்.
தீபாவளி அமாவாசை நோம்பு இந்து குடும்பங்கள் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.
அதாவது தீபாவளி நோன்பு மூலம் குடும்பல் நலம் பெறும் என்பதால் மக்கள் இதைக் கடைபிடிக்கிறார்கள்.
இந்த நோன்பு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது.
அப்போது கடவுளை தங்கள் வீடுகளில் அலங்கரித்து மக்கள் கொண்டாடுவார்கள்.
நோன்பை தொடங்கவுள்ள பெண்கள் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு நோன்பு தொடங்குவார்கள்.
அப்போது ஒரு பொழுது விரதம் இருந்து கோயிலுக்குச் செல்லுவார்கள். பின்னர் கடவுளுக்குப் படையலிட்டு விரதத்தை முடிப்பர். அதுவரையில் எதுவும் சாப்பிடம்மாட்டார்கள்.
இந்நோன்பை ஆண், பெண் இருபாலாரும் இருக்கலாம், குறிப்பாக மணமான பெண்கள் விரதம் இருப்பார்கள்.