Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றான தீபாவளி!!

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (14:00 IST)
தீபாவளி பண்டிகை இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். அனைவராலும் பிரியமுடன் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு  பண்டிகையாகும்.

 
ஐந்து தினங்கள் வரை கொண்டாடும் இப்பண்டிகையின் நோக்கம் அறியாமை இருளைப் போக்கவும், தீயதை நீக்கி நல்லதை ஏற்கவும்,  வாழ்வில் நம்பிக்கையூட்டவும், ஆன்மீக ஒளி தீபத்தை ஏற்றும் முகமாக கொண்டாடப்படுகிறது.
 
தீய குணத்தை எரித்துவிட வேண்டும். தீபத்தில், தீப ஒளியில், ஜீவான்மா வாசம் செய்ய அருள் பெறுவதுதான் ஐதீகத்தோடு  கொண்டாடுகின்றனர்.
 
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராடுகின்றனர். சிலர் அதற்கு முன் இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு இட்டு மகிழவர். நல்லெண்ணெய்யில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.
 
தீபவளியன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவை, விலங்குகளின் நலன் கருதி சில பகுதிகளில் பட்டாசு  இல்லா திருநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments