Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை செல்வதற்கு பதில் மீண்டும் சென்னைக்கே வந்த விமானம்! – பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (16:16 IST)
சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கை சென்ற விமானம் மீண்டும் சென்னையிலேயே வந்து இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அல்லயன்ஸ் ஏர் பயணிகள் விமானம் ஒன்று 28 பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை யாழ்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இலங்கை சென்ற அந்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் இருந்தது. இதனால் மீண்டும் அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னையிலேயே இறக்கி விடப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருநாள் தாமதம் செய்யப்படுவது பயணிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments