Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை செல்வதற்கு பதில் மீண்டும் சென்னைக்கே வந்த விமானம்! – பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (16:16 IST)
சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கை சென்ற விமானம் மீண்டும் சென்னையிலேயே வந்து இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அல்லயன்ஸ் ஏர் பயணிகள் விமானம் ஒன்று 28 பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை யாழ்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இலங்கை சென்ற அந்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் இருந்தது. இதனால் மீண்டும் அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னையிலேயே இறக்கி விடப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருநாள் தாமதம் செய்யப்படுவது பயணிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

அடுத்த கட்டுரையில்
Show comments