Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டிரைக் எதிரொலி : தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு ; போலீசார் குவிப்பு

ஸ்டிரைக் எதிரொலி : தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு ; போலீசார் குவிப்பு

ஸ்டிரைக் எதிரொலி : தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு ; போலீசார் குவிப்பு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:56 IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து தமிழகத்தின் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.


 

 
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வெறியாட்டங்களை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.   
 
இதில் ஆளும் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழக-கர்நாடக எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஓசூர் எல்லையில்,  இருமாநில போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ உள்பட 500 மதிமுகவினர் கைது!