Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்திலேயே கபடி வீரர் உயிரிழப்பு...சோக சம்பவம்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (14:08 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பெரியபுறங்கால் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ்(21). இவர் அங்குள்ள தனியார்  கல்லூரியில் பிஎஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு கபடி விளையாட்டில் இருந்த தீவிர ஆர்வம் காரணமாக சேலத்தில் உள்ள அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

இந்த  நிலையில்,    நேற்று பண்ருட்டி, மானடிகுப்பத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் கலந்துகொண்டு விளையாடினார். அதில், கீழகுப்பம் கிராம எதிர் அணி வீரரை பிடிக்க சென்ற போது விமல்ராஜ் மார்பில் அடிபட்டு கீழே விழுந்து சுய  நினைவு இழந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிடிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை  செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments