Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை- பாமக வழக்கறிஞர்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (16:39 IST)
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ். இதற்கு நடிகர் சூர்யாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டார். பின்னர் இந்தப் பட விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது.

இந்நிலையில்  ஜெய்பீம் பட இயக்குநர் மற்றும் சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என பாமக வழக்கறிஞர் கே. பாலு பேட்டியளித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஜெய்பீம் பட இயக்குநர் மற்றும் சூர்யா தரப்பி இருந்து இன்னும் பதில் வரவில்லை. நஷ்ட ஈடு கிடைக்கப்பெற்றாலதைப் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments