Publish Date: Wed, 25 Mar 2026 (14:52 IST)
Updated Date: Wed, 25 Mar 2026 (14:53 IST)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி . திமுக ஆதரவாலராக அறியப்படும் இவர் விஜய் மீதான தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்.
தவெக தலைவர் விஜய் தஞ்சையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவரை பார்க்க வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் உயிரிழ்ந்தார். இது தமிழக மக்களை வருத்தம் அடைய செய்தது.
இது குறித்து ஜூலி சமூகவலைதளத்தில் கூறியபோது, 50-50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிடாதீங்கனு சொன்னதுக்கு, இந்த வல்கர் வாரியர்ஸ்பொங்கு பொங்குனு பொங்கிட்டு இருந்தாங்க. அண்ணனைப் பார்க்கலாம்னு ஆசையா வந்த பையன் இன்று இறந்துவிட்டான். இதில் யாருக்கு நஷ்டம்? பெற்றவங்களுக்குத்தான் நஷ்டம். உங்களுக்கு என்ன, ஜாலியா அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் போய்ட்டு இருக்கீங்க. திரும்பவும் சொல்றேன், 50-ஐ 500 ஆக்கிடாதீங்க என்று கடுமையாக விளாசியுள்ளார் ஜூலி.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறீர்கள் முதலில் உங்க வல்கர் வாரியர்ஸிடமிருந்துதான் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். வேண்டுமென்றால் என் மமெண்ட் பகுதியை சென்று பாருங்கள் புரியும் என்றார்